இளங்கோவனுக்கு எதிராக வழக்கு போட்டுள்ளபோது அதிமுகவினர் போராடுவது கண்டிக்கத்தக்கது: வைகோ
சென்னை: கருத்து சுதந்திரம் கூட இல்லாத பாசிச ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வன்முறையை தூண்டிவிடும் விதமாக அதிமுகவினர் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது அம்மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்காத ஜெயலலிதா தற்போது இளங்கோவனுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை மட்டும் அனுமதிப்பது ஏன்?.
கருத்துகளை கூட சுதந்திரமாக தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இது கவலை அளிக்கும் விஷயம் ஆகும். தான் ஒரு மத்திய சட்ட அமைச்சர் என்பதை மறந்துவிட்டு கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்த சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications