அரக்கோணம் அருகே மன உளைச்சலால் பெற்ற மகனை கிணற்றில் வீசி கொன்ற பயங்கரம்.. தப்பியோடிய தந்தைக்கு வலை
பெற்ற மகனை கிணற்றில் வீசி தந்தை கொலை செய்துள்ளார்.
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தான் மன உளைச்சல் காரணமாக பெற்ற மகனை கிணற்றுக்குள் வீசி கொலை செய்துள்ளார் ஒரு தந்தை.
அரக்கோணம் அருகே உள்ள பகுதி கணபதிபுரம். இங்கு தன் இரு மகன்களுடன் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் 7 வயது, மற்றும் மூன்றரை வயது மகனை தன்னுடனே வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனாலும் முனியப்பன் நீண்ட காலம் விரக்தியிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், முனியப்பன் தன் இரண்டு மகன்களையும் வீட்டுக்கு பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் வீசினார். ஆனால் 7 வயது மகன் தத்தளித்து கிணற்றிலிருந்து மேலே வந்துவிட்டான்.
மகன் மீண்டு கிணற்றிலிருந்து வந்ததை கண்ட முனியப்பன், அவனை இழுத்துக் கொண்டு போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் தந்தையின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த சிறுவன் பயத்தில் அலறி கத்தினான். இதனால் விரைந்து வந்த அக்கம்பபக்கத்தினர், வீட்டிற்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த முனியப்பனை காப்பாற்றினர்.
இதையடுத்து, தன் தம்பி கிணற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான் என சிறுவன கூறவும், அங்கிருந்தோர் சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அந்த மூன்றரை வயது சிறுவனை அவர்கள் சடலமாகத்தான் மீட்டனர். அக்கம்பக்கத்தினரை பார்த்ததும், தன் மகன் உயிரிழந்துவிட்டது தெரிந்ததும், முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்ததுடன், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய முனியப்பனையும் தேடிவருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications