வீட்டுக்கு அடிக்கடி வெளியாட்கள் புழக்கம்...தட்டிக் கேட்ட மாமனாரைக் கத்தியால் குத்திய மருமகள்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: வீட்டுக்கு அடிக்கடி வாலிபர்கள், வெளியாட்கள் அதிக அளவில் வந்து போனதால் எரிச்சலடைந்த முதியவர், தனது மருமகளிடம் இதுகுறித்துக் கேட்டு சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்தப் பெண் தனது மாமனாரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தி விட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மருமகள் உள்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன்கள் சம்பத் (47), முருகேசன் (44). வீட்டிலேயே சொந்தமாக நெசவுத் தொழில் செய்து வருகிறார்கள். தத்தமது குடும்பத்துடன் தனித் தனியாக வசித்து வருகின்னர்.

முருகேசன் மனைவி பெயர் லட்சுமி. முருகேசன் இல்லாத நேரம் பார்த்து லட்சுமியைப் பார்க்க ஏகப்பட்ட பேர் வந்து போவார்களாம். குறிப்பாக ஆண்கள் அதிகம் வருவார்களாம். இதனால் அதிருப்தி அடைந்தார் மாமனார் சுப்பிரமணியன்.

இதுகுறித்து லட்சுமியிடமும் அவர் யார் இவர்கள், எதற்கு வருகிறார்கள் என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார். இந்த நிலையில் முருகேசன் வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு கார்த்திக் என்ற வாலிபர் வந்துள்ளார். இதைப் பார்த்த சுப்பிரமணியன், அவரைத் தடுத்து நிறுத்தி யார் நீ, எதற்காக ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து வருகிறாய் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு கார்த்திக் பதில் சொல்லாமல் போய் விட்டாராம்.

போனவர் தனது நண்ர்கள் சிலரைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளார். பின்னர் லட்சுமியுடன் சேர்ந்து சுப்பிரமணியனையும், அவரது மூத்த மகன் சம்பத்தையும் அவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.

இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், லட்சுமி, கார்த்திக், நண்பர்கள் சேட்டு, ரஞ்சித் குமார், குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+