சபாஷ்.. அதிமுகவுக்கு சுபாஷிஸ்ட் பார்வர்ட் பிளாக் ஆதரவு
மதுரை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுபாஷிஸ்ட் பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அதிமுக தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து, அதிமுகவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் சுபாஷிஸ்ட் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் அதன் தலைவர் பசும் பொன்பாண்டியன் தலைமையில் மதுரை ஆர்த்தி ஓட்டலில் நடைபெற்றது.
அப்போது, கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தருவது என்றும்,அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும்,கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிவில், சுபாஷிஸ்ட் பார்வர்ட் கட்சியின் தலைவர் பசும்பொன் பாண்டியன் தலைமையில் அக் கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அதிமுக வேட்பாளரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சால்வை அணிவித்து அதிமுக சார்பில் நன்றி தெரிவித்தார்.