இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். பாஜக: பினராயி விஜயன் சாடல்
இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இறங்கியுள்ளன என கேரளா முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.
சென்னை: இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக முயற்சிக்கின்றன; ஆகையால் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் போராட்டங்கள் தொடர வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் பினராயி விஜயன் பேசியதாவது:
இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலானது. நாடு விடுதலை பெற்றது முதலே மாநிலங்களின் சுயாட்சி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மாநில அரசுகள் கலைப்பு
நாம் கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசினாலும் தற்போது மத்தியில் ஒற்றை அதிகார குவிப்புதான் நடைபெறுகிறது. தற்போதும் மாநில அரசுகளை நினைத்தால் மத்திய அரசு கலைக்கும் சூழல்தான் உள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்
நாட்டிலேயே 1959-ல் முதன் முதலாக கேரளா மாநில அரசைத்தான் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. மாநிலங்களில் பெரும்பான்மை இருந்தபோதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்படுகின்றன.

கூட்டாட்சியை சிதைக்க முயற்சி
அரசியல் சாசனத்தில் கூட்டாட்சி தத்துவமே முதன்மையானதாக இருக்கிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுகிறது. மாநிலங்களை பலவீனப்படுத்தி மத்திய ஒற்றையாட்சியை வலுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கூட்டாட்சிக்கான போராட்டங்கள் அவசியம்
ஆகையால் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளையும் போராட்டங்களையும் நாம் தொடர வேண்டும். நாட்டில் ஒற்றையாட்சி முறையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக முயற்சிக்கின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications