குற்றால அருவி தடாகத்தில் தவறி விழுந்த 2 பேர் மீட்பு
குற்றாலம்: குற்றால அருவி தடாகத்தில் குளிக்கச் சென்று தவறி விழுந்த 2 பேர் தீயணைப்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியின் ஆண்கள், பெண்கள் பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குளிக்கும் போது கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ராஜலட்சுமி ,சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேர் தவறி விழுந்தனர்.
தடாகத்தில் தவறி விழுந்த இருவரையும் அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் தடாகத்தில் குதித்து காப்பாற்றினர்.
அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றிய தீயணைப்பு மீட்பு பணித் துறையினரை பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications