அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசி அக்கா மகன் தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்- ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ28 கோடி அபராதம் விதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடியில் (ஃபெரா வழக்கு) ஈடுபட்டதற்காக சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ28 கோடி அபராதம் விதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. தமிழக முதல்வர் பதவிய கபளீகரம் செய்ய நினைத்திருக்கும் மன்னார்குடி கோஷ்டிக்கு முதலாவது மரண அடியாக இது கருதப்படுகிறது.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன். இவர்தான் தற்போது அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகிப்பவர்.
சசிகலாவை முதல்வராக்குவதற்கும் தினகரன் தீவிர முனைப்பில் இருந்து வருகிறார். அத்துடன் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பிலும் படுபிசியாக இருந்து வருகிறார்.

அன்னிய செலாவணி மோசடி வழக்குகள்
தினகரனின் வங்கி கணக்குகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்தன. ஆனால் தாம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என வாதிட்டார் தினகரன். இதை அமலாக்கத்துறை நிராகரித்தது.

தினகரன் அப்பீல்
இது தொடர்பான விசாரணையின் முடிவில் தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார்.

ரூ28 கோடி விதித்தது சரியே
ஆனால் மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதத் தொகை விதித்தது சரியே என அதிரடி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.

இன்று தீர்ப்பு
இதை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகல் அளித்தது. சசிகலா அக்கா மகன் தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு ரூ28 கோடி அபராதம் விதித்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து தினகரனின் மனுவை டிஸ்மிஸ் செய்தது. தமிழக முதல்வர் பதவியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கும் மன்னார்குடி கோஷ்டிக்கு இது மரண அடியாக கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications