காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தினசரி செய்தித்தாள்களில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, செய்திகள் வராத நாளே இல்லை, மக்களின் உயிர் உடமைகளுக்கு பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையில் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். நிர்வாக வரைமுறைப்படி ஒரு காவலர் 505 மக்களுக்கு பாதுகாப்பு பொறுப்பு மேற்கொள்ள வேண்டும். காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தற்போது ஒரு காவலர் 609 பேருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

காவலர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பணியில் தாமதம் ஏற்படுகிறது, இதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகரில் 137 காவல் நிலையங்களும், 63 போக்குவரத்து காவல் நிலையங்களும் உள்ளனர்.
தினசரி 15 முதல் 20 வரையிலான புகார் மனுக்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெறப்படுகிறது. போதிய எண்ணிக்கையில் காவலர்கள், அதிகாரிகள் இல்லாததால் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆகிறது. தமிழக மக்கள் தொகை 7,21,47,030. தமிழக காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கை 1,35,830.
ஆனால் பணியில் உள்ள காவலர்களின் எண்ணிக்கை 98,500. காலி பணியிடங்கள் 37,330. மக்கள் தொகை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே போகிறது, குற்றங்களும் அதிகரித்து கொண்டே போகிறது. கூலி படையினரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தமிழக அரசு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications