அருந்ததியர் ஜாதி சத்துணவு பணியாளர் சமைப்பதற்கு எதிர்ப்பு.. 75 பேர் மீது வழக்கு பாய்ந்தது
அவினாசி அருகே அருந்ததியர் சத்துணவு பணியாளர் சமைப்பதை எதிர்த்த ஆதிக்க சாதியினர் 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின் கிழ் சமையல் பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.
பாப்பம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி ஆதிக்க சாதியினர் சாதி காரணமாக பாப்பம்மாள் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவினாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பணியாளரை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இது சட்டவிரோதமான தீண்டாமை செயல் என்று கி.வீரமணி மற்றும் தீண்டாமை ஒழிப்பு அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும், சாதி காரணமாக பெண் பணியாளரை பணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது எஸ்சி. எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குச் சென்று, பாப்பம்மாளுக்கு ஆதரவாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சப் கலெக்டர், டிஎஸ்பி, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பாப்பம்மாவை சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மீண்டும் அவர் இதே பள்ளியில் பணி செய்வார் என்று உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த பிரச்சனையில், சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாளுக்கு அதே பள்ளியில் மீண்டும் பணி நியமனமும், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவுகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என அரசு மற்றும் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சேவூர் காவல் நிலைய போலீஸார், அருந்ததியர் சமூக சத்துணவு பணியாளரை சாதி காரணமாக சமைக்க எதிர்ப்பு தெரிவித்த திருமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த 75 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் திருமலைக்கவுண்டன்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம். திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பண்ண போறோம்????" என்று கேள்வி எழுப்பியுள்ளார்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications