சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே திடீர் தீ விபத்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தெற்கு ரயில்வே கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் 4வது மாடியில் இன்று காலை சுமார் 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர், எனினும் தீ பரவியதால் அலுவலகம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று இரவு குளிர்சாதன பெட்டியை அணைக்காமல் சென்றதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி விட்டன.












Click it and Unblock the Notifications