For Daily Alerts
Just In
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து
சென்னை: சிவகாசி அருகே சிங்கம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள சிங்கம்பட்டியில் உள்ளது கே.ஆர் பட்டாசு ஆலை. இங்கு வெடிமருந்து உராய்வால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையிலுள்ள 2 அறைகள் பலத்த சேதமடைந்துள்ளன.
தகவல் அறிந்ததும், தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். காலை நேரம் என்பால் பணியாளர்கள் யாரும் விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
English summary
2 rooms damaged in an explosives caused by explosives at KR crackers factory at Singamatti near Sivakasi.
Story first published: Thursday, April 27, 2017, 8:48 [IST]