வேலூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: 10 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் காயமடைந்தனர்.
வேலூர் அருகே புவனேஷ்வரிப்பேட்டை என்ற இடத்தில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வழக்கமான வேலையில் ஈடுட்டிருந்த போது இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications