வல்லூர் அனல்மின்நிலையத்தில் ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து- வடசென்னையில் மின்வெட்டு அபாயம்!
வல்லூர் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் வடசென்னையில் மின்வெட்டு அபாயம் உருவாகியுள்ளது,.
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: வல்லூர் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின் உறுபத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வடசென்னை மின்வெட்டு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
திருவள்ளூர் அருகே வல்லூர் அனல்மின் நிலையத்தின் 3-வது யூனிட்டில் ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வடசென்னைக்கு வல்லூரில் இருந்தே மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடசென்னை பகுதியில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications