தொடரும் சிவாலய தீ விபத்துகள்... கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் 'குபு குபு'!
Recommended Video

கும்பகோணம் : கும்பகோணம் அருகே சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே கருப்பூர் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். மிகவும் பழமையான இந்தக் கோயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த பூஜைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதனையடுத்து கோயிலுக்குள் இருந்த பக்தர்களும், நிர்வாகிகளும் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். சமீப காலமாக அடுத்தடுத்து சிவ ஆலயங்களில் ஏற்படும் தீ விபத்துகள் மக்களை பீதிக்குள்ளாகியுள்ள நிலையில் கும்பகோணத்தில் கோயில் கருவறையில் ஏற்பட்ட விபத்து பக்தர்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இதனைத் தொடர்ந்து திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடித்து எரிந்தது என அடுத்தடுத்த தீ விபத்து சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications