For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில் திடீர் தீ - பயணிகள் பதட்டம்
சென்னை: காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தினசரி ரயிலில் தீப்பிடித்த காரணத்தினால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் பாலூரை நெருங்கும் போது பயணிகள் பெட்டியில் தீப்பிடித்தது.
இதனால் உடனே ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இத்திடீர் தீவிபத்தினால் பயணிகள் பெரிதும் அச்சமடைந்தனர். எனினும், இவ்விபத்தினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சேதங்களும் பெருமளவில் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
sudden fire accident in Chennai - Kancheepuram electric train and train delayed 2 hours.
Story first published: Friday, July 10, 2015, 17:18 [IST]