அன்பார்ந்த பொதுமக்களே.. குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வீடாதீர்கள்.. தீயணைப்புத் துறை வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்புத் துறை மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இந்த நடவடிக்கைகளைக் கையாண்டு தீபாவளியன்று விபத்தில்லாத வகையில் பட்டாசுகளை வெடித்து மகிழுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு- மீட்புப்பணிதுறை பொதுமக்களுக்கு தீபாவளி தீ தடுப்பு துண்டு பிரசுரத்தை விநியோகித்து வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  • பெரியோர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளியில் தண்ணீரும் இன்னொரு வாளியில் மணலும் தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
Fire dept's advisory to the people for accident free Diwali
  • எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் வெடி ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியில் அல்லது உலர்ந்த மண்ணில் வைக்க வேண்டும்.
  • வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடக்கூடாது. எடுக்கவும் கூடாது.
  • துணியில் தீ பற்றி விட்டால் ஓடாதீர்கள். தரையில் படுத்து உருள வேண்டும்.
  • பாட்டில் மற்றும் டப்பாக்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்கக்கூடாது.
  • அதேபோல் பட்டாசுகளை கீழ்க்கண்ட இடங்களில் வைத்து வெடிக்கக்கூடாது.
  • பட்டாசு கடைகள், வைக்கோல் போர், கேஸ் கிடங்குகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், டிரான்ஸ்பார்மர், மார்க்கெட்.

ராக்கெட் வெடிகளை குடிசை பகுதி, மரங்கள் நிறைந்த பகுதி ஆகிய பகுதிகளில் வெடிக்காமல் பரந்த மைதானத்தில் மட்டுமே ராக்கெட்டை வெடிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+