முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் தீ விபத்து... 3 மணி நேரம் போராடி அணைப்பு
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் ஏற்பட்ட தீயை 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டின் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டிலிருந்து வெளியேறிய புகையால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் எந்த விதமான பொருட்கள் சேதமடைந்தது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திமுகவினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் குவிந்தனர். திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பிரமுகர்களும் ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அவரிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications