அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மதுரை வீட்டில் திடீர் தீ விபத்து
மதுரை: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தந்தை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரில் உள்ள ஆர்.பி.உதயகுமார் தந்தை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாகவே தீ விபத்து நடந்தது என தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை பெயர் போஸ். இவரது மனைவி பெயர் தாமரைச்செல்வி. இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.பி. உதயகுமார் தற்போது வருவாய் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தந்தை மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை வசிக்கும் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாகவே தீ விபத்து நடந்தது என தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அமைச்சர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications