தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.+
தூத்துக்குடி அனல்மின் நிலையம், துறைமுகம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5அலகுகள் மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மின் உற்பத்தியில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த அனல்மின் நிலையம் போதிய பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி பழுதாவது வாடிக்கையாவிட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று மதியம் சாம்பல் கொண்டு செல்லும் பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் இந்த தீ விபத்தால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் இந்த தீ விபத்தால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் தீ விபத்தினால் எவ்வளவு சேதமானது என்பது தொடர்பான விபரங்கள் எதையும் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications