கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதிநவீன பி8ஐ போயிங் போர் விமானங்கள் அர்ப்பணிப்பு
அரக்கோணம்: நாட்டின் கடற்படைக்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதிநவீன மிக வேகமாக செல்லக் கூடிய போயிங் பி-8ஐ ரக விமானங்கள் இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படைக்காக அதிநவீன போர் விமானமான பி8ஐ எனும் உலகத்தரம் வாய்ந்த 8 விமானங்கள் வாங்க கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்கா நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறை 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து 2013-ஆம் ஆண்டு மே 15-ந் தேதி முதல் விமானம் இந்தியா வந்தடைந்தது.

இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து நேரிடையாக அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளத்துக்கு வந்தது. 8வது விமானம் கடந்த அக்டோபர் 12-ந் தேதி இந்தியா வந்தடைந்தது.
முதல் விமான பெறப்பட்ட நிலையில் இருந்து இந்த விமானங்களில் இந்திய கடற்படையினர் 30 மாத பயிற்சியை இக்குழுவின் தலைவர் கேப்டன் வெங்கடேஸ்வரன் ரங்கநாதன் தலைமையில் மேற்கொண்டனர்.
இந்த விமானங்கள் பயிற்சியின் போதே, மலேசியன் ஏர்லைன்ஸ் மாயமாக மறைந்த சம்பவத்தில் அதைத் தேடும் பணியிலும் பயன்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழா அணிவகுப்பிலும் பங்கேற்றது.
தற்போது அனைத்துப் பயிற்சிகளும் முடிந்த நிலையில் பி8ஐ விமானங்கள் முழுவதுமாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான விழா அரக்கோணம் கடற்படை தளத்தில் இன்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அத்துடன் போர்ட் பிளேயர் தளத்தில் இருந்து அரக்கோணத்துக்கு பி8ஐ விமானத்தில் பயணித்துப் பார்த்தார். அப்போது, உலகிலேயே மிக சிறந்த கண்காணிப்பு விமானமாக இது திகழும் என்றார்.
இந்த அதிநவீன பி8 ஐ போர் விமானமானது கடற்படை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். இந்த விமானங்கள் 10 மணிநேரம் தொடர்ந்து பறக்கக் கூடியவை என்பது சிறப்பம்சமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications