கேசி பழனிச்சாமி, அன்புநாதன் வீடு ரெய்டு எதிரொலி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் ஒத்திவைப்பு
சென்னை: அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மற்றும் அதிமுக பிரமுகர் அன்புநாதன் ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடத்தி வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்திய வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரில் இத் தொகுதியில் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெற இருந்தது. இந்த நிலையில் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையம் திடீரென அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது. இங்கு மே 25-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிகளவு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமி, மணல் கொள்ளை மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவர் என்பது புகார். அதேபோல் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியவர்.
இந்த இருவரும் இத்தொகுதியில் வெல்வதற்காக வாக்காளர்களுக்கு ரூ 1,000 முதல் ரூ10,000 வரை பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கமாக ரூ.5 கோடி பிடிபட்டது. ஆனால் அன்புநாதன் வீட்டில் மட்டும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பிடிபட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இதேபோல் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமியின் வீடு, லாட்ஜ் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள கேசி பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. கேசி பழனிச்சாமி வீட்டில் மட்டும் மொத்தம் ரூ.2 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பல கோடி ரூபாயை இரு கட்சி வேட்பாளர்களும் பதுக்கி வைத்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக இந்த அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ரத்து செய்து மே 23-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்திய தேர்தல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் கொடுத்த புகாரின் பேரில் ஒரு சட்டசபை தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 233 தொகுதிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications