கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 22ஆம் தேதி மின்சார உற்பத்தி தொடங்கியது.
முதற்கட்டமாக 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் சில பரிசோதனைகளுக்காக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒன்றிரண்டு நாட்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
அப்போது 210 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மின்தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மீண்டும் கூடங்குளத்தில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறுகையில், "அடுத்தகட்ட தொழில்நுட்ப பரிசோதனைக்காக தற்காலிகமாக மின் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறோம். 200 மெகாவாட் அளவுக்கு முதல் உலையில் சீராக மின் உற்பத்தி நடந்தது.
இந்த அளவை அதிகரிப்பதற்கான பரிசோதனைக்கு மின் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறோம். விரைவில் மீண்டும் மின்சார உற்பத்தியை தொடங்குவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications