இரவிலும் நீடித்த குழித்துறை மீனவர்கள் ரயில் மறியல்....தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம்
கன்னியாகுமரி குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் ரயில் தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

கன்னியாகுமரி: மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி குழித்துறையில் மீனவர்கள் தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி வியாழ்ககிழமை காலை 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சின்னத்துறையில் இருந்து பேரணியாக சென்று குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய இந்த போராட்டம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
முன்னதாக மீனவர்கள் ரயில் தண்டவாளத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரயில் மார்க்கமாக சென்னை திரும்பும் திட்டத்தை கைவிட்டு கார் மூலம் மதுரைக்குச் சென்று பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். நள்ளிரவில் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications