For Daily Alerts
Just In
தமிழக பந்த்துக்கு மீனவர்கள் ஆதரவு.. காசிமேட்டில் 20 டன் மீன்கள் தேக்கம் #tamilnadubandh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் காசிமேட்டில் 20 டன் மீன்கள் தேக்கமடைந்துள்ளது.
சென்னையில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. அதேநேரம், மட்டன் கடைகள் அதிக அளவில் திறந்திருந்தன. இதனால் மீனுக்கு பதிலாக மட்டன் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது.
English summary
Chennai Fishermen supports Tamilnadu Bandh as they avoides to go to the sea for fishing.
Story first published: Friday, September 16, 2016, 11:00 [IST]