காவல்துறையில் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் நீடிக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவல் துறையில் பணிபுரியும் 5 ஏ.டி.ஜி.பி.களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.கே.ராஜேந்திரன், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கமிஷனராக நீடிக்கிறார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
டி.கே.ராஜேந்திரன், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கமிஷனராக நீடிக்கிறார். ஜார்ஜ், பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பியாக யாகவும், சிறைத்துறை டி.ஜி.பி.,யாகவும் உள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் துறை சி.ஐ.டி., பிரிவு டிஜிபி ராதாகிருஷ்ணன் உள்ளார். ஏ.டி.ஜி.பி.,(பயிற்சி) மகேந்திரன், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று அதே பதவியில் உள்ளார். லாலம் சங்கா டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications