ஆந்திராவில் கொல்லப்பட்ட 5 தமிழரும் முதல்வர் எடப்பாடியாரின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்!
ஆந்திராவில் கொல்லப்பட்ட 5 பேரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Recommended Video

சேலம்: ஆந்திராவில் கொல்லப்பட்ட பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது ஆந்திர போலீஸாரின் திட்டமிட்ட கொலை என தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் ஆந்திர ஏரியில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரிந்துள்ளது.
அவர்களில் இருவர் சேலம் அடியனூரைச் சேர்ந்த முருகேசன், கீழ்ஆவாரை கருப்பணன் உடல்கள் என உறுதிப்படுத்தப்பட்டன, மேலும் ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் ஆகிய மூன்று பேரும் கருமந்துறையை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல முறை சேலம் மாவட்டத்தை சேர்ந்த பலர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications