"மந்திரி தந்திரி" கட்டுரை.... ஆனந்த விகடன் மீது 5 தமிழக அமைச்சர்கள் சார்பில் புதிய அவதூறு வழக்கு
சென்னை: ஆனந்த விகடன் வார இதழுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் இன்று புதிய அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விகடன் குழுமத்தின் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் வாரம் இரு முறை இதழ்கள் மீது முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். அண்மையில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் குறித்த கட்டுரைக்காக ஆனந்த விகடன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அதை வெளியிட்டதற்காக முரசொலி ஆசிரியரான திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் கருணாநிதி நீதிமன்றத்திலும் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அம் மனுவில், ஆனந்த விகடனில் "மந்திரி தந்திரி" பகுதியில் அமைச்சர்கள் பற்றி கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானது. தமிழக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை வெளியிட்ட ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications