காதலிக்க மறுத்த மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை
திண்டுக்கல்: காதலிக்க மறுத்த மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் வாலிபர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனி விதித்து திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் என்.எஸ்.நகர் அபிராமி நகரை சேர்ந்த ராஜாங்கம் மகள் புவனேஸ்வரி (16), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். புவனேஸ்வரியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார் திண்டுக்கல் நரிப்பாறையை சேர்ந்த பாண்டி என்ற வெல்டிங் பாண்டி (25).
பாண்டியின் காதலை புவனேஸ்வரி நிராகரித்தப் போதும், அவரது பெற்றோரைச் சந்தித்து, புவனேஸ்வரியைத் திருமணம் செய்து வைக்கும்படி மிரட்டியுள்ளார் பாண்டி. தொடர்ந்து பாண்டி கொடுத்து வந்த மன உளைச்சல்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்ட புவனேஸ்வர், கடந்த 2010ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
புவனேஸ்வரியின் மரணம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெல்டிங் பாண்டியைக் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்ந்லையில், காதலிக்க மறுத்த மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாண்டிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications