தமிழகத்துக்கு திடீரென படையெடுத்த காசி அகோரிகள்- திருச்சியில் நள்ளிரவில் அரை நிர்வாண பூஜை!
காசி அகோரிகள் 20 பேர் தமிழகத்துக்கு திடீரென வருகை தந்துள்ளனர். திருச்சி அருகே அரை நிர்வாண நிலையில் பூஜை நடத்தி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
திருச்சி: வட இந்தியாவில் நிர்வாணமாக மண்டையோடு சகிதமாக வலம் வரும் மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகள் 20 பேர் திருச்சி காளி கோவிலில் முகாமிட்டு பூஜை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியின் கங்கை நதிக் கரையிலும் ஹரித்துவார், ரிஷிகேஷிலும் நிர்வாண அகோரிகள் முகாமிட்டிருப்பர். காசி கங்கை நதிக்கரையில் எரியூட்டப்படும் மனித சடலங்களின் மாமிசங்களை சாப்பிடுபவர்கள் அகோரிகள்.

கடும் குளிரிலும் நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டையோடுடன் பீதியூட்டும் வகையில் அகோரிகள் வலம் வருவர். ஆனால் இத்தகைய அகோரிகள் தமிழகத்து பக்கம் இதுவரை எட்டிப்பார்த்தது இல்லை.
திடீரென இந்துத்துவா அமைப்பினர் காசி அகோரிகள் 20 பேரை திருச்சிக்கு வரவழைத்து நள்ளிரவில் கால பைரவர் பூஜை நடத்த செய்துள்ளனர். தமிழகத்தில் நிர்வாணமாக அலைந்தால் ஆபத்து என்பதால் அரை நிர்வாண கோலத்தில் இந்த பூஜைகளள அகோரிகள் நடத்தி உள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் திடீரென நடத்தப்படுகின்றன. வட இந்திய அகோரிகள் தமிழகத்துக்கு முதல் முறையாக வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications