திறக்கப்பட்டது மேட்டூர் அணை... காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணை இன்று பாசனத்திற்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரிக் கரையோரமாக வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயருமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணை முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கமாபுரிப்பட்டிணம், சின்னக்காவூர் ஆகிய காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி கரையையொட்டி வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருவதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று இரவு 10 மணி முதல் 16 கண் பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
தொடர் நீர்வரத்து காரணமாக, ஓரிரு நாட்களில் அணை முழுவதும் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால், மேட்டூர் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அணை நிரம்பினால் பல ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் என்பதால் இதனால் காவிரிக் கரையோரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications