பெருக்கெடுக்கும் காவிரி.. வேகமாக பலவீனமடையும் கொள்ளிடம் இரும்புப் பாலத் தூண்.. கீழே விழும் அபாயம்!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில் திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில் திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த இரண்டு வாராமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.55 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது.
இந்த நிலையில்தான் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது. காலையில் சிறிய அளவில் இருந்த விரிசல் இப்போது பெரிதாகி உள்ளது.
பாலத்தின் தூண் ஒன்று மொத்தமாக இடியும் நிலையில் உள்ளது. பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பயணிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும், அதிக எடை கொண்ட வாகனங்களை ஓட்டி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications