Breaking News: தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
டெல்லி: கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அது 2 நாட்களில் மேட்டூர் அணையை வந்தடையும்.
முன்னேற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்
கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை
கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
கபினியில் இருந்து 70,000 கன அடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது
ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு