கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நடாகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கர்நாடாகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இரண்டு நாட்களில் மேட்டூருக்கு வரும் என தெரிகிறது.
இதன் காரணமாக தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னேற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications