ஜெ. பிறந்த நாளை லட்டு கொடுத்து கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி
நெல்லை: ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது 69வது பிறந்த நாள் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளால் இன்று கொண்டாடப்படுகிறது.

அதிமுக தற்போது இரண்டாக பிரிந்துள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் சசிகலா ஆதரவாளர்களும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை போட்டி போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சங்கரன் கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான முத்துச்செல்வி இன்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடினார்.
முன்னாள் எம்எல்ஏவான முத்துச்செல்வி சசிகலா தரப்புக்கு எதிர்ப்பு ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications