முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் தற்கொலை
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் வசித்து வருகிறார் சாமி. இவர் சமீபத்தில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரது மனைவி உமா மாரடைப்பால் மரணமடைந்தார்.

தற்போது தி.மு.க. மீனவர் அணி மாநில செயலாளராக உள்ள சாமி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்றுள்ளார்.
வீட்டில் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் (28), அவரது மனைவி பிரஜன்யா (23), மகள் இனியா (1) ஆகியோர் இருந்தனர். நேற்று இரவு இனியவன் மாடியில் தூங்க சென்றார். பிரஜன்யா, குழந்தையுடன் வீட்டின் கீழ் பகுதியில் தூங்கினார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இனியவன் கீழே வரவில்லை. எனவே பிரஜன்யா மாடிக்கு சென்று பார்த்தார். அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது இனியவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. திருவொற்றியூர் போலீஸார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இனியவன் தற்கொலை குறித்து அறிந்த கே.பி.பி.சாமிக்கு உடனே ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை திரும்பினார். உடல்நிலை சரியில்லாததால் இனியவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
சாமியின் மகள் உதயா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். சாமிக்கு பரசுபிரபாகரன் என்ற இன்னொரு மகனும் உள்ளார்.
கே.பி.பி. சாமியின் தந்தையும் திமுகவின் மிகத் தீவிரமாக பணியாற்றியவர் ஆவார். கடந்த திமுக ஆட்சியில் சாமி மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications