மாஜி அதிமுக எம்.எல்.ஏ.வின் பேரன் அட்டகாசம்.. பெண்ணை மணந்து கொள்வதாக கூறி மோசடி.. கைது

முன்னாள் எம்எல்ஏ பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பெண்ணை காதலித்ததுடன், 2 வருஷமாக கல்யாணமும் செய்து கொள்வதாக ஏமாற்றிய குற்றத்திற்காக முன்னாள் எம்எல்ஏவின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ துரை. இவர் இப்போதும் அதிமுகவில்தான் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது பேரன்தான் ராம்பிரசாத் என்பவர். 26 வயதாகும் இவர் திருச்சி அரசு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். ராம்பிரசாத் ரம்யா என்பவரை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். ரம்யா ஒருவகையில் ராம்பிரசாத்துக்கு சொந்தமாம்.

 ரம்யாவின் எச்சரிக்கை

ரம்யாவின் எச்சரிக்கை

"கல்யாணம் பண்ணா உன்னதான் செய்வேன்" என்று 2 வருடங்களாகவே ராம்பிரசாத் ரம்யாவிடம் சொல்லி வந்திருக்கிறார். இதனை நம்பிய ரம்யாவும் அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்தும், அனுமதித்தும் உள்ளார். இதனால் இருவருமே எல்லைமீறி நடந்து கொண்டுள்ளனர். இதனிடையே, ரம்யாவை காதலித்து வந்த ராம்பிரசாத், தன் காலேஜில் படிக்கும் இன்னொரு பெண்ணை விரும்ப ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் ரம்யாவின் காதுகளுக்கு எட்ட, ரம்யாவோ கல்லூரிக்கே வந்து ராம்பிரசாத்தையும், அந்த பெண்ணையும் கண்டித்து எச்சரித்துவிட்டு போனார்.

 புகார் செய்வேன்

புகார் செய்வேன்

ஆனாலும் ராம்பிரசாத் ரம்யாவை கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். இதனை கண்ட திவ்யா 10 நாட்களுக்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் போலீசில் புகார் செய்வேன் என்றார். ஆனால் ராம் பிரசாத் கண்டு கொள்ளவில்லை.

 தலைமறைவு

தலைமறைவு

இதையடுத்து திவ்யா, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் ராம்பிரசாத் தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசார் வலைவீசி தேடினர். ஆனால் கல்லூரிக்கு ராம்பிரசாத் மட்டும் வந்து போகிறார் என்ற தகவல் தெரிந்ததும், நேற்று மாலை கல்லூரி வாசலில் போலீசார் காத்திருந்தனர். அதன்படியே கல்லூரி முடித்து வெளியே வந்த ராம்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

 கடைசிவரை பிடிவாதம்

கடைசிவரை பிடிவாதம்

காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறியும், ரம்யாவை திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்று ராம்பிரசாத் பிடிவாதமாகவே இருந்திருக்கிறார். இதனையடுத்து போலீசார் ராம்பிரசாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ரம்யாவையும் மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+