எங்களுக்கு சீட் வேண்டும்- மாஜி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏக்கள் சத்தியமூர்த்திபவனை முற்றுகை
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பெண் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதுவரை 33 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திருச்சி தொகுதி தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஆண்கள்.

இந்த நிலையில் இன்று மதியம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராணி, எம்.எல்.ஏக்கள் மகேஸ்வரி, ராணி வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் திடீர் என்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்நாட்டில் போட்டியிடும் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications