3 இடங்களில் சாலை விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பலி- 10 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழகத்தில் மூன்று இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கர்நாடக மாநிலம் பிடார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

Four killed, 10 injured in road accident

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கி மேடை பாடகர் முத்து உயிரிழந்தார். புகைப்பட்டியில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதேபோல நாமக்கல் மாவட்டம் வளையபட்டி அருகே கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களி்ல் 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+