For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: பக்தர்கள் 4 பேர் பலி

Google Oneindia Tamil News

தருமபுரி: தர்மபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று தீபத்தை தரிசித்து விட்டு வந்த பக்தர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.

தருமபுரி அருகே ஒடசல்பட்டி கூட்டுரோடு என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது லாரி ஒன்று மோதியது. இதில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் நான்கு பேரும் திருக்கார்த்திகைத் தினமான நேற்று திருவண்ணாமலை சென்று விட்டு திரும்பிபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Four people were killed on the spot when the car in which they travelling rammed a lorry on Dharmapuri road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X