Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி-5 பேர் படுகாயம்

வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோட்டில் பேருந்து சென்றபோது, எதிர்புறத்திலிருந்து கார் ஒன்று வேகமாக வந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

 Four members of the same family were killed in road accident Vathalakundu

இதில் பேருந்து காரின் மீது ஏறி நின்றது. இதனால் கார் பலமாக நொறுங்கியது. காருக்குள் இருந்த 2 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் காரில் உயிருக்கு போராடிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காரில் பயணம் செய்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+