வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி-5 பேர் படுகாயம்
வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோட்டில் பேருந்து சென்றபோது, எதிர்புறத்திலிருந்து கார் ஒன்று வேகமாக வந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்து காரின் மீது ஏறி நின்றது. இதனால் கார் பலமாக நொறுங்கியது. காருக்குள் இருந்த 2 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் காரில் உயிருக்கு போராடிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரில் பயணம் செய்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.