மருந்துக்கடை முதலாளியே மருத்துவரான கொடுமை... கைது செய்த போலீஸ்: வீடியோ
மருந்துக்கடை நடத்தி வந்தவர்,மருத்துவர் போல் வைத்தியம் பார்த்து வந்தார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் போலி மருத்துவராக செயல்பட்டு வந்த மருந்த்துக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் ஒரு மருந்துக்கடை உள்ளது. இந்த மருந்துக்கடையில் அரசு மருத்துவர் ஒருவர் மாலையில் சிறிது நேரம் தனியாக மருத்துவம் பார்த்து வந்தார். அந்த மருத்துவர் சில நாட்களாக வரவில்லை எனத் தெரிகிறது.

அதையடுத்து இந்த மருந்துக் கடையின் உரிமையாளரான ரவிக்குமாரே மருத்துவர் போல வைத்தியம் பார்த்து வந்துள்ளார். அதையறிந்த ஊர்ப் பொதுமக்கள் சிலர் காவல்துரைக்கு புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரை விசாரித்த போலீசார், போலி மருத்துவர் ரவிகுமாரை கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போலீ மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்களில் பலர் விடுதலையாகி வந்து மீண்டும் இதே போலி மருத்துவர் தொழிலை செய்கின்றனர். இந்த செயலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டம் இயற்றப்படாதவரை போலி மருத்துவர்களை ஒழிக்க முடியாது என்பது சுடும் நிஜம்.












Click it and Unblock the Notifications