தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த பாமக: அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?- திருமா
சென்னை: தேர்தல் நேரத்தில் பாமகவினர் கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளனர். அவர்களுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். அதனால் சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று பாமக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து வந்தனர். மேலும் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி, அள்ளிக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில் திமுகவும் சரி, அதிமுகவும் சரி கோடிக் கணக்கில் செலவு செய்து பொதுக் கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தின. அதே சமயம் அவ்விரு கட்சிகளுக்கு சற்றும் குறையாமல் பாமகவும் கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளது.
பாமகவுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications