சுஷ்மா சுவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – பிரகாஷ் ஜவடேகர்
சென்னை: லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேக்கேதாட்டுவில் புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை எதுவும் கர்நாடக அரசிடம் இருந்து வரவில்லை எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லலித் மோடி விவகாரத்தில் மற்ற கட்சிகளும், காங்கிரசும் தேவையில்லாமல் சுஷ்மா சுவராஜ் மீது குற்றம் சாட்டுகின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை எதுவும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்காக பசுமை காடுகள் வளர்க்கும் திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.