”குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவித்தால் டெங்குவிலிருந்து தப்பிக்கலாம்” - மருத்துவர் விளக்கம்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அரசு மருத்துவர் முழுக்கை சட்டை அணிந்தால் டெங்கு காய்ச்சல் வராது என்று விளக்கமளித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நர்சிங் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவியர் 500 பேர் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பேரணியாக வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஸ், குடும்பலநலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அரசு மருத்துவர் ரவிக்குமார், "டெங்கு காய்ச்சலில் நான்கு வகை உள்ளது. புதிதாக ஐந்தாவது வகை மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் "பி" மற்றும் "சி" ஆகிய இரண்டு வகையும் மிகவும் ஆபத்தானவை. காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் அரைக்கை சட்டை அணிவது தான். இதனால், கொசு எளிதாக குழந்தைகளின் கைகளை தாக்குகிறது.
முழுக்கை சட்டை அணிந்தால் கொசு கடிக்காது. தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு, மழைக் காலம் முடியும் வரை முழுக்கட்டை சட்டை அணிவித்து வெளியில் அனுப்ப வேண்டும். இதன் மூலம், டெங்கு காய்ச்சல் வருவதை முற்றிலும் குறைக்கலாம்" என்று தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications