பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்... ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாக்குக்கு பணம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்பவர்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம் என உறுதியளித்தார். தொகுதி மக்கள் தேவைக்கேற்ப ரேஷன் கடைகள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications