துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும்...இது கட்காரியின் நம்பிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நிதின்கட்காரி செவ்வாய்க்கிழமையன்று கூறியதாவது:
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலை திட்டம் தாமதப்படுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் செலவுதான் அதிகரிக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை இயக்குனரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
சேது சமுத்திரத் திட்டத்தினை மாற்று வழியில் செயல்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் அறிக்கைக்குப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications