408 விநாயகர் சிலைகள் ஊர்வலம்: கடலில் விசர்ஜனம்
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் 408 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை முழுவதும் இந்து இயக்கங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில், இந்து இயக்கங்கள் சார்பில் மட்டும் 1,864 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தச் சிலைகளுக்கு கடந்த 2 நாள்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சுமார் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு சிலைகளை பிரதிஷ்டை செய்த இயக்கத்தினரால், ஆங்காங்கே பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட்டு சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

விநாயகர் ஊர்வலம்
பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதை முன்னிட்டு, சென்னையில் சமூக அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்கு மேளதாளங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

5 இடங்களில் கரைப்பு
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் நீலாங்கரை பல்கலைகழக நகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய 5 இடங்களில் கரைக்கப்பட்டன.

கிரேன்கள் மூலம்
சிலைகளைக் கரைக்கும் இடத்தில் ஒரு உதவி ஆணையர், 5 காவல் ஆய்வாளர், 10 உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு பெரிய சிலைகள், கிரேன்கள் மூலம் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

408 சிலைகள் விசர்ஜனம்
சென்னையில் மொத்தம் 408 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கரைக்கப்படுகின்றன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications