ஆர்.கே.நகரில் தினகரனுக்கு செக் வைக்க கங்கை அமரனே நல்ல சாய்ஸ்... 30-ல் தமிழக பாஜக ஆலோசனை
ஆர்கே நகரில் பாஜக வேட்பாளராக மீண்டும் கங்கை அமரனே களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகரில் தினகரனுக்கு செக் வைக்க கங்கை அமரன்தான் சரியான சாய்ஸ் என கூறி வருகிறதாம் தமிழக பாஜக.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை பாஜக வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிட்டார். தினகரன் குடும்பத்தின் சொத்து அபகரிப்பு வண்டவாளங்களை பிட்டு பிட்டு வைத்தார் கங்கை அமரன்.
கங்கை அமரனின் இந்த பேச்சு தினகரனுக்கு வந்து விழும் வாக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் என்பது பாஜகவின் வியூகமாக இருந்தது. இம்முறை பாஜகவின் திரைமறைவு தோழமை கட்சியான அதிமுக இரட்டை இலை சின்னத்துடன் களமிறங்குகிறது.
இரட்டை இலை சின்னத்துடன் வரும் வேட்பாளர் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற பெரும் முனைப்பு பாஜகவுக்கும் இருக்கிறது. இரட்டை இலைக்கு எதிராக தினகரன் களமிறங்குவதாக அறிவித்திருக்கிறார்.
ஆகையால் தினகரன் பக்கம் வாக்குகள் சேராமல் சிதறடிக்க கங்கை அமரனையே மீண்டும் களமிறக்கலாம் என தமிழக பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சென்னையில் வரும் 30-ந் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட இருக்கிறது.