இளையராஜாவின் இசை அனைவருக்குமான மூச்சுக் காற்று.. தனி சொத்தாக்குவது வருத்தமளிக்கிறது.. கங்கை அமரன்
இளையராஜாவின் இசை அனைவருக்குமான மூச்சுக் காற்று என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதனை தனிச் சொத்தாக்குவது வருத்தமளிக்கிறது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியன் மற்றும் சித்ரா, தன்னுடைய அனுமதி பெறாமல் பாடக் கூடாது என்று கூறியிருந்தார். மீறிப் பாடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியதாவது: நான் ஒரு இசை ரசிகன். என்னைப் பொருத்தவரை இளையராஜாவின் இசையை ஒரு வியாபாரமாக நாம் பார்க்கவில்லை.
நமக்கு சொந்தமாகக் கிடைக்கக் கூடிய மூச்சுக் காற்று போல நினைக்கிறோம். இளையராஜா பாடலை கேட்கும் போது மக்கள் சந்தோஷப்படுகிறார்கள். அதுதான் உண்மை.

எஸ்.பி.பி. குழுவில்…
இளையராஜா திடீரென பாடல்களை எஸ்.பி.பி. பாடக் கூடாது என்று சொன்னது கஷ்டமான ஒன்று. ஏனென்றால் எஸ்.பி. பாலசுப்ரமணியன் வைத்திருந்த கச்சேரிக் குழுதான், நான், அண்ணன் இளையராஜா, அண்ணன் பாஸ்கர் எல்லாம் சேர்ந்து வாத்தியக்காரர்களாக பணியாற்றினோம்.

தனிப்பட்ட முறையில்…
எஸ்.பி.பி நெருக்கமான நண்பர். உரிமம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதால் பாட்டை மேடையில் பாடாதே என்று தனிப்பட்ட முறையில் இளையராஜா சொல்லி இருக்கலாம். எதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டாம்.

தவிர்த்து..
ஏன் இதனை இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் கேள்வி. இதனை தவிர்த்து இருக்கலாம். ஜேசுதாசோ, மனோவா, சித்ராவோ, பாலசுப்ரமணியமோ, மற்றவர்களோ என்னுடைய பாடல்களை மேடையில் பாடக் கூடாது என்று அவர் சொல்வதை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது.
கெட்ட பெயர்
அவருடைய பாடல்களை எப்படி பாடாமல் இருக்க முடியும். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை பாட யார் அழைத்தாலும் இளையராஜாவின் பாடலை பாடச் சொல்லி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அப்போது அவர் பாடத்தான் செய்வார். அதனால் இளையராஜா செய்தது தவறு. எனக்கு அதில் விருப்பம் இல்லை. அவருடைய பாடல்களை தனிச் சொத்தாக்கி மற்றவர்களை பாடக் கூடாது என்று சொல்வதே அவருக்கு ஒரு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கங்கை அமரன் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications