வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்து கஞ்சா விற்கும் கும்பல்.. போலீஸ் ஷாக் தகவல்!
சென்னை: கஞ்சா விற்பனையில் பல புதுமைகளைப் புகுத்தி வருகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள். போலீஸார் இதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் கஞ்சாவை ஒழிக்கவும் போலீஸார் என்னதான் செய்தாலும் புதுப் புது டெக்னிக்குகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடந்து கொண்டுதான் உள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே கஞ்சா விற்கின்றனர். கஞ்சா சாக்லேட் விவகாரம் பெரும் தலைவலியாகவே உள்ளது போலீஸாருக்கு. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக கஞ்சா விற்பன நடைபெறுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நவீன ரூட்டுகளில்
இப்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால் அதைப் பயன்படுத்தி தங்களது தொழிலை வித்தியாசமான முறையில் அபிவிருத்தி செய்து வருகிறார்கள் கஞ்சா வியாபாரிகள்.

வாட்ஸ் ஆப் குரூப்
பல கஞ்சா வியாபாரிகள் வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்துள்ளனராம். அதில் தங்களது வாடிக்கையாளர்களை மட்டும் இணைத்துக் கொள்கின்றனராம்.

ஹோம் டெலிவரி
அந்த குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு கஞ்சா தேவைப்படும்போது மெசேஜ் செய்தால் போதும், ஹோம் டெலிவரி செய்து விடுகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள்.

உறுப்பினர்களுக்கு மட்டுமே
இதில் தங்களது வாடிக்கையாளர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் இந்த குரூப்பில் இடம் பெற முடியாதாம்.

இதுவரை 6000 கிலோ கஞ்சா பறிமுதல்
இந்த ஆண்டு மட்டும் இதுவரை சென்னையில் 6000 கிலோ கஞ்சாவைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கார், வேன், பஸ், ரயில் என பல ரூபங்களில் கடத்தி வரப்பட்டவை இவை.

செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சா
அதிகபட்சமாக கடந்த 27ம் தேதி செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சாவைச் சொல்லலாம். ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சா
அதிகபட்சமாக கடந்த 27ம் தேதி செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சாவைச் சொல்லலாம். ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications