வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்து கஞ்சா விற்கும் கும்பல்.. போலீஸ் ஷாக் தகவல்!
சென்னை: கஞ்சா விற்பனையில் பல புதுமைகளைப் புகுத்தி வருகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள். போலீஸார் இதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் கஞ்சாவை ஒழிக்கவும் போலீஸார் என்னதான் செய்தாலும் புதுப் புது டெக்னிக்குகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடந்து கொண்டுதான் உள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே கஞ்சா விற்கின்றனர். கஞ்சா சாக்லேட் விவகாரம் பெரும் தலைவலியாகவே உள்ளது போலீஸாருக்கு. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக கஞ்சா விற்பன நடைபெறுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நவீன ரூட்டுகளில்
இப்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால் அதைப் பயன்படுத்தி தங்களது தொழிலை வித்தியாசமான முறையில் அபிவிருத்தி செய்து வருகிறார்கள் கஞ்சா வியாபாரிகள்.

வாட்ஸ் ஆப் குரூப்
பல கஞ்சா வியாபாரிகள் வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்துள்ளனராம். அதில் தங்களது வாடிக்கையாளர்களை மட்டும் இணைத்துக் கொள்கின்றனராம்.

ஹோம் டெலிவரி
அந்த குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு கஞ்சா தேவைப்படும்போது மெசேஜ் செய்தால் போதும், ஹோம் டெலிவரி செய்து விடுகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள்.

உறுப்பினர்களுக்கு மட்டுமே
இதில் தங்களது வாடிக்கையாளர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் இந்த குரூப்பில் இடம் பெற முடியாதாம்.

இதுவரை 6000 கிலோ கஞ்சா பறிமுதல்
இந்த ஆண்டு மட்டும் இதுவரை சென்னையில் 6000 கிலோ கஞ்சாவைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கார், வேன், பஸ், ரயில் என பல ரூபங்களில் கடத்தி வரப்பட்டவை இவை.

செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சா
அதிகபட்சமாக கடந்த 27ம் தேதி செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சாவைச் சொல்லலாம். ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சா
அதிகபட்சமாக கடந்த 27ம் தேதி செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சாவைச் சொல்லலாம். ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications